Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வயது வரம்பை உயர்த்தக் கோரிக்கை :

நாமக்கல்: முதுகலை பட்டதாரி ஆசிரியர் வயது வரம்பை உயர்த்த வேண்டும், என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரக்கணக் கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் முதுநிலைப் பட்டதாரிகளின் வயது வரம்பு 40 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான வேலையில்லா முதுகலைப் பட்டதாரிகள் பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, வயது உச்ச வரம்பை நீக்கி 59 வயது வரை உள்ள முதுகலை பட்டதாரிகள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x