Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே ராமன்புதூரில் திறந்தவெளியில் அம்மன் உட்பட சுவாமி சிலைகள் இருந்தன. இச்சிலைகள் திடீரென அகற்றப்பட்டன. கன்னியாகுமரி போலீஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜன் தலைமையில் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள், `சுவாமி சிலைகளை அகற்றியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களைச் சமரசம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT