Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

சுவாமி சிலைகள் அகற்றம்; பாஜக எதிர்ப்பு :

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே ராமன்புதூரில் திறந்தவெளியில் அம்மன் உட்பட சுவாமி சிலைகள் இருந்தன. இச்சிலைகள் திடீரென அகற்றப்பட்டன. கன்னியாகுமரி போலீஸார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜன் தலைமையில் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள், `சுவாமி சிலைகளை அகற்றியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களைச் சமரசம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x