Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

செட்டிக்குளத்தில் சமுதாய வளைகாப்பு; 50 கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் :

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் மலையடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர், 50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து, ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. விழாவில், கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கையேடுகள் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் கலா தங்கராசு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x