Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி :

கோவை வெள்ளலூர் சிங்காநல்லூர் சாலையில் சித்தி விநாயகர்கோயில் அருகில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை ஏடிஎம் மையத்திலிருந்து அலாரம் ஒலித்தது.

இது குறித்து போத்தனூர் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். காவல்உதவி ஆணையர் வின்சென்ட்,காவல் ஆய்வாளர் நடேசன்தலைமையிலான போலீஸார் சென்று ஆய்வு நடத்தினர்.

வங்கி நிர்வாகிகள் மூலமாக கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கேமராவில் கருப்பு ஸ்பிரே அடித்து, ஏடிஎம் மையத்தை சுற்றி மிளகாய் பொடி தூவியிருந்ததும், எச்சரிக்கை மணிக்கான இணைப்பு வயரை துண்டிக்க முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீஸார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x