Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பழனாத்தாள்(80). இவர், கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள மாரப்பகவுண்டன்புதூரில் தங்கி, கூலி வேலைக்கு சென்றுவந்துள்ளார். நேற்று முன்தினம் பழனாத்தாள் இறந்து கிடப்பதாகஅருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற ஆனைமலை போலீஸார், உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூதாட்டியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொன்னுச்சாமி (45), பழனாத்தாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பொன்னுச்சாமியை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT