Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM
பென்னாகரம் வட்டம் பி.கோடுபட்டி ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காவிரி தீர்த்தம் கொண்டு வருதலும், இரவு விநாயகர் பூஜை, பிரனேஷபலி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி பிரவேச பலி, தீபாராதனை, கும்பலங்காரம், கலாகர்சனம், ரஷாபந்தனம், மிருதசங்கிரனம், அங்குரார்ப்பணம், வேத பாராயணம், மண்டப பூஜை, அக்னிகார்யம் பூர்ணாஹூதி உபச்சாரம், சாற்றுமுறை தீபாராதனை, அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை மங்கள இசை, 2-ம் கால பூஜை, நாடி சந்தனம், 108 மூலிகை திரவிய ஹோமம், தீபாராதனையும், தொடர்ந்து கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் தச தரிசனம், தச தானம் மகா தீபாராதனை நடந்தன.
விழாவில், பி.கோடுபட்டி சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர். இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT