Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

எம்பி பதவியை அதிமுகவுக்கு வழங்க வேண்டும் : புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலங்களவை எம்பிபதவியை அதிமுகவுக்கு வழங்கு மாறு முதல்வர் ரங்கசாமியிடம் அதிமுக கிழக்கு மாநில செயலர் அன்பழகன் வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலங்களவை எம்பிபதவியை பெற ஆளும் அரசி லுள்ள என்ஆர் காங்கிரஸ் - பாஜகஇடையே கடும் போட்டி நிலவி வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி முதல்வரும், என்ஆர் காங்கி ரஸ் நிறுவனத் தலைவருமான ரங்கசாமியிடம் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நேற்று அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி ஆட்சி அமைக்க அதிமுக துணை நின்றது. தாங்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நியமனம் செய்யப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களில் அதிமுகவிற்கு இடம் அளிக்கவில்லை.

சட்டப்பேரவையில் அதிமுக விற்கு பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் இருந்த மாநிலங் களவை உறுப்பினர் பதவியை கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவிற்கு வழங்க தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும், முதல்வருமான நீங்கள், என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளிடையே ஒருமித்த கருத்தினை ஏற்படுத்துவதற்காக கலந்தாலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதிமுகவிற்கு மாநிலங்களவை எம்பி பதவியை மனமுவந்து வழங்க வேண்டும. என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x