Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் நாராயணி பீடம் மற்றும் புரம் பொற்கோயிலில் சக்தி அம்மாவின் ‘கிரீன் சக்தி திட்டம்’ மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சக்தி அம்மாவின் ஆசியுடன் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா புரம் பொற்கோயிலில் நேற்று நடைபெற்றது.
இதில், பொற்கோயில் இயக்குநர் மற்றும் அறங்காவலர் சுரேஷ்பாபு தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பொற்கோயில் சேவார்த்திகள் மற்றும் சக்தி அம்மாவின் பக்தர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT