Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

 புரம் பொற்கோயிலில் : மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம் :

வேலூர்: வேலூர் அடுத்த அரியூர்  நாராயணி பீடம் மற்றும்  புரம் பொற்கோயிலில்  சக்தி அம்மாவின் ‘கிரீன் சக்தி திட்டம்’ மூலம் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,  சக்தி அம்மாவின் ஆசியுடன் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் தொடக்க விழா  புரம் பொற்கோயிலில் நேற்று நடைபெற்றது.

இதில், பொற்கோயில் இயக்குநர் மற்றும் அறங்காவலர் சுரேஷ்பாபு தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பொற்கோயில் சேவார்த்திகள் மற்றும்  சக்தி அம்மாவின் பக்தர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x