Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது நடைமேடையில் ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில், ரயில்வே காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பார்க் விரைவு ரயில் அங்கு வந்தது. அதில், முன்பதிவு பெட்டியில் ரயில்வே காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கு பயணிகள் இருக்கைக்கு அடியில் 300 கிலோ ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த அரிசியை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x