Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

குப்பை கிடங்கில் தீ விபத்து :

உடுமலை- தாராபுரம் சாலையில் உள்ள சிவசக்தி காலனியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படுவதில்லை. இந்த கிடங்கை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

நேற்று குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவலின்பேரில் உடுமலை தீயணைப்பு நிலையவீரர்கள் சென்று, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x