Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை முதல் : 1.4 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் :

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு தேசிய வைட்டமின் ஏ சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நாளை (20-ம் தேதி) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள சுமார் 1.4 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளன.

வைட்டமின் ஏ சத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மனவளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மைக்கும் மிகவும் இன்றியமையாத நுண்சத்து ஆகும். மேலும், வைட்டமின் ஏ சத்து கண் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மிகவும் அவசியமான ஒன்றாகும். பக்கவிளைவுகள் ஏற்படாது.

இத்திரவம் அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் 6 முதல் 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லியும், 12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லியும் வழங்கப்படவுள்ளன

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x