Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

மதுரை கோட்டத்தில் கடந்த 5 மாதங்களில் - சரக்கு போக்குவரத்து வருவாய் ரூ.100 கோடியை கடந்தது :

மதுரை

மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்கோட் டத்துக்குட்பட்ட தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரம், நிலக்கரி, வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள், மானாமதுரையில் இருந்து மரக்கரி ஆகியவை சரக்கு ரயில்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் கடந்த ஐந்து மாதங்களில் ரூ.100.5 கோடிக்கும் அதிகமாக சரக்கு போக்குவரத்து வருமானம் கிடைத்துள்ளது.

324 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் ஒன்பது லட்சம் டன் சரக்குகள் 5 மாதங்களில் அனுப்ப ப்பட்டுள்ளன. கடந்தாண்டு 37 ரயில் பெட்டிகள் மூலம் நிலக்கரி அனுப்பியதன் மூலம் ரூ.12 கோடி கிடைத்துள்ளது. இந்தாண்டு 73 ரயில் பெட்டிகள் மூலம் நிலக்கரி அனுப்பியதில் ரூ.24 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. டிராக் டர்கள் அனுப்பியதில் கடந்த ஆண்டு வருமானம் ரூ.5.4 கோடி. இந்தாண்டு ரூ.6.4 கோடியாக அதிகரித்துள்ளது.

சரக்கு போக்குவரத்து மூலம் வருமானத்தை அதிகரிக்க மதுரை கோட்ட வர்த்தக வளர்ச்சிக் குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ராஜ்-நந்தகான் என்ற ரயில் நிலையத்துக்கு புண்ணாக்கு மூட்டைகள் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

புண்ணாக்கு மூட் டைகளை அனுப்பியதில் ரூ.32.5 லட்சம் வருவாய் கிடைத்ததாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x