Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சிவஞானபுரம் பகுதியில் 10 ஆயிரம் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு பனைமர விதைகள் நட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர்கள் அந்தோணி திலிப், பால், கயத்தாறு வட்டாட்சியர் பேச்சிமுத்து, சிவஞானபுரம் ஊராட்சித் தலைவர் காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT