Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

குமரியில் நீடிக்கும் சாரல் மழை :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது.

நேற்று காலை வரை, களியலில் 14 மிமீமழை பதிவானது. குழித்துறையில் 22 மிமீ,பெருஞ்சாணி மற்றும் புத்தன் அணையில்தலா 10, சிவலோகத்தில் 13, சுருளகோடுமற்றும் மாம்பழத்துறையாறில் தலா8, கோழிப்போர்விளையில் 18 மற்றும்அடையாமடையில் 9 மிமீ மழை பெய்தது.மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் இருந்து வெளியேறும் தண்ணீருடன், மழைநீரும் கலந்து செல்வதால் புத்தன்அணை, திற்பரப்பு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பேச்சிப்பாறையில் 43 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 335 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 426 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம்61 அடியாக உள்ளது. அணைக்கு உள்வரத்தாக 197 கனஅடி தண்ணீர் செல்லும் நிலையில் அணையில் இருந்து 430 கனஅடி தண்ணீர விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 172 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

சாரல் மழை பொழிந்தாலும் எந்நேரமும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளை பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x