Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

நீட் தேர்வை ஆளுங்கட்சி அரசியலாக்கக் கூடாது : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து

ஆளுங்கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் நீட் தேர்வை அரசியலாக்கக் கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தினால் தான் முறையாக இருக்கும். எனவே, தமிழகத் தேர்தல் ஆணையம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கரோனா 3-வது அலை வருவதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கிராமம் வாரியாக முறைப்படுத்தி மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நீட் தேர்வு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட மனநிலை, அதன் மூலம் நேரிட்ட உயிரிழப்பு வேதனைக்குரியது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், அதன் கூட்டணிக் கட்சியினரும் நீட் தேர்வை அரசியலாக்கக் கூடாது. கல்வியில் அரசியலைப் புகுத்துவது என்பது தவறான செயல். தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சியினர் கல்வியை அரசியலாக்கக் கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x