Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

திருப்பூர், உடுமலை பகுதிகளில் அண்ணா பிறந்தநாள் விழா :

திருப்பூர் / உடுமலை

அண்ணாவின் 113-வது பிறந்தநாள்விழாவை திருப்பூர், உடுமலையில் பல்வேறு கட்சியினர் கொண்டாடினர்.

திருப்பூர் மாநகர், மாவட்ட அதிமுக சார்பில், மாநகராட்சி அலுவலகம் அருகே அண்ணா உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன் கலந்து கொண்டார்.

இதேபோல உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் அதன் மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் மு.மத்தின் உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டப் பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில், கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x