Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM

விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு விருத்தாசலம் வட்டாட்சியர் எச்சரிக்கை :

விருத்தாசலம் அய்யனார் கோயில் தெருவில் உள்ள சிலை தயாரிப்பு கூடங்களில் வருவாய் வட்டாட்சியர் சிவகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிலை தயாரிப்பாளர்களிடம், "கரோனா பரவலை கருத்தில் கொண்டு, பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட கூடாதென அரசு தடை விதித்துள் ளது. எனவே ராட்சத அளவிலான சிலைகளை தயாரிக்க கூடாது. சிறிய அளவிலான களிமண் சிலைகளை மட்டும் விற்பனை செய்யலாம். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை விற்பனை செய்வது உறுதியானால் தொழில்கூடங்களை சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x