Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

எரிவாயு விலை உயர்வு கண்டித்து போராட்டம் :

திருப்பூர்:சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து, திருப்பூர் வெள்ளியங்காடு நான்குசாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளை விலையை, மத்திய அரசு தற்போது ரூ.25 உயர்த்தியுள்ளது. கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரோனா காலகட்டத்தில் மக்கள் வேலை மற்றும் ஊதியம் இழப்பு உள்ளிட்டவைகளில் சிக்கித்தவித்து வருகின்றனர். எனவே, சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x