Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

பிக்கனப்பள்ளி கிராமத்தில் துணை ஆட்சியர் ஆய்வு :

பிக்கனப்பள்ளி கிராமத்தில் ஓசூர் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கோலட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிக்கனப்பள்ளி, தண்டரைமேடு கிராமங்களில் 67 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலங்கள் தளி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளதால் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை காலி செய்யுமாறு அலுவலர்கள் கூறுவதாக, கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் காடுமுச்சந்திரம் கிராமத்தில் நடந்த முகாமில், ஓசூர் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று பிக்கனப்பள்ளி, தண்டரைமேடு கிராமத்தில் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x