Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

சாலையை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் :

சோழவரம் அருகேயுள்ள நல்லூர் ஊராட்சியில் நல்லூர், ஆட்டந்தாங்கல், காந்தி நகர், மருதுபாண்டி நகர், கே.கே.நகர், சோலையம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல சாலைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும் குழியுமாக உள்ளன. இங்குள்ள 7 மயானங்கள் குப்பை நிறைந்து காணப்படுகின்றன.

எனவே, சாலைகளை சீரமைக்க வேண்டும். மயானங்களில் குப்பையை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்என்று மக்கள் தொடர்ந்துவலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆட்டந்தாங்கல் பாலம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x