Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மகிமை தாஸ். இவருக்கு ஜென்சி, பிரின்சிஎன்ற 2 மகள்களும், பிளஸ் 2 முடித்த நிலோபர் ரிச்சர்டு (17) என்கிற மகனும் உள்ளனர். இதில், ஜென்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த வாரம் மகிமைதாஸ் தனது மகன்நிலோபர் ரிச்சர்டுடன் தனது மகள் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ரிச்சர்டு தனது செல் போனில் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார். அப் போது தெரு மின்கம்பத்தின் வயர்கள் வீட்டின் மாடியில் உள்ள இரும்பு ராடில் உரசி சென்றதை அறியாமல் அதன் மீது கால் வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசிப்பட்ட அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்து வர்கள் அவர் உயிரி ழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x