Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது - 64 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பறிமுதல் :

கோவில்பட்டி

கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை காவல் நிலைய பகுதியில் 6 வீடுகளில் தங்க நகை, பணம் திருடப்பட்டது. 4 இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கள்ளம்புளியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். ரூ.20 லட்சம் மதிப்பிலான 64 பவுன்தங்க நகைகள், 50 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. மொத்தம் 9 வழக்குகளில் அவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை எஸ்பி பார்வையிட்டார். தனிப்படையினரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x