Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

ஆரம்ப பள்ளிகளை திறக்க வலியுறுத்தல் :

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் அறிக்கை:

கரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், முதலில் ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல, சென்னை உயர் நீதிமன்றமும் முதலில் ஆரம்ப பள்ளிகளை திறப்பதை பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆரம்ப பள்ளிகளை திறப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்படாது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்படவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x