Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26-ம் தேதிதொடங்கியது. பொறியியல் படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர். 9-வது நாளான நேற்று மாலை 5.30மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் 74 ஆயிரத்து 309 பேர் பதிவுக் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 56 ஆயிரத்து 935 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தமிழ்நாடுபொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருசோத்தமன் தெரிவித் தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT