Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM

கஞ்சா கடத்திய பெண் உட்பட மூவர் கைது :

குமுளி தேனி மாவட்டம், குமுளி சிறப்பு சார்பு ஆய்வாளர் சுதாகரன் தலைமையிலான போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லோயர்கேம்ப் - காஞ்சிமரத்துறை சாலையில் வந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இவற்றை கடத்திய கம்பத்தைச் சேர்ந்த குபேந்திரன் (48), சுகப்பிரியா (35), கூடலூரைச் சேர்ந்த சிவகாமன் (35) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x