Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (45). இவர், தனது வீட்டில் தமிழக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் காவல் துறையினர், தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள மோகன் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மினி வேன் ஒன்றில் 3 டன் ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்த தயாராக இருப்பதைக் கண்ட அதிகாரிகள் அந்த அரிசியுடன், மோகன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் சேர்ந்து, மொத்தமாக 4 டன் ரேஷன் அரிசி, மினி வேன், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மோகன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x