Published : 02 Aug 2021 03:17 AM
Last Updated : 02 Aug 2021 03:17 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் குமிழியம் கிராமத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் மற்றும் விதைத் திருவிழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மரபு வகை நெல்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், ஆத்தூர் கிச்சடி சம்பா, கம்பு, சோளம், தினை, கேழ்வரகு, நாட்டு காய்கறிகள், மர செக்கு எண்ணெய் வகைகள் உள்ளிட்டவை காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பாரம்பரிய விதைகளை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில், இயற்கை விவசாயம் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது, எவ்வாறு மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அனைவருக்கும் மூலிகை சூப், மூலிகை தண்ணீர், கம்மங்கூழ், கேழ்வரகு, வரகு அரிசி கஞ்சி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT