Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 7 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் காவல் ஆய்வாளர் கோமளவள்ளி தலைமையிலான காவல்துறையினர், சடத்தாங்கல் கூட்டுச் சாலையில் நேற்று முன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரித்தனர்.
அதில் அவர், தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமம் மாதா கோயில் தெருவில் வசிக்கும் செல்வரசு மகன் அசோக்(20) என்பதும், அவர் ஓட்டி வந்தது செய்யாறு அடுத்த முனுகப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவில் திருடுபோன சுரேஷ் என்பவரது இரு சக்கர வாகனம் என தெரியவந்தது. மேலும் விசாரணையில், தி.மலை மாவட்டத்தில் பல இடங் களில் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தி.மலை மாவட்டத்தில் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT