Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

காட்பாடி ரயில் நிலையத்தில் - தொழிலதிபர் மாரடைப்பால் உயிரிழப்பு :

காட்பாடி ரயில் நிலையத்தில் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெங்களூரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மதன்லால் பாங்கியா (74). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், தொழில் விஷயமாக சென்னை சென்றுவிட்டு மீண்டும் பெங்ளூருவுக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது, மதன்லால் பாங்கியா ரயிலில் இருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கினார். அதற்குள் ரயில் புறப்பட்டது. இதனால், ரயில் ஏறுவதற்காக அவர் வேகமாக ஓடிச்சென்றார். அப்போது திடீரென மதன்லால் பாங்கியா தடுமாறி கீழே விழுந்தார். அதிர்ச்சியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைப் பார்த்த பயணிகள் சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே மதன்லால் பாங்கியா உயிரிழந்தார்.

இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x