Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM
அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட இச்சிப்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து அரக்கோணம் மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அரக் கோணம் கோட்டத்துக்கு உட் பட்ட இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (29-ம் தேதி) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர், வடமாம்பாக்கம், எம்.ஆர்.எப், தணிகைபோளூர், வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT