Published : 28 Jul 2021 03:16 AM
Last Updated : 28 Jul 2021 03:16 AM
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் வழக்கறிஞர் கீதாஞ்சலி (50), மகள் சிவரஞ்சனியுடன்(24) வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கீதாஞ்சலியின் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தால், பக்கத்து வீட்டினர் பார்த்தபோது, கீதாஞ்சலியும், அவரது மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கவரப்பேட்டை போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீதாஞ்சலி எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'தங்கள் இறப்பில் யாருக்கும் தொடர்பு இல்லை' என கூறப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT