Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
பரமக்குடியைச் சேர்ந்த பாண்டித் துரை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த 2012-ல் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு சென்றுவிட்டு பாம்புவிழுந்தான் பகுதி வழியாக திரும்பிய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேலங்குடியைச் சேர்ந்த சிவகுமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் பசும்பொன்னில் இருந்து பொன்னையாபுரம் வழி யாக இரு சக்கர வாகனத்தில் திரும்பிய சிவகங்கை மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மாரிக் கண்ணன், கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி ஆகியோர் அடித் துக் கொலை செய்யப்பட்டனர்.
மூவர் கொலை தொடர்பாக எமனேஸ்வரம் போலீஸார் வழக் குப் பதிவு செய்து, பழனி முரு கன் உட்பட பலரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் என்னை சாட்சியாக சேர்த்துள்ளனர். சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இவ்வழக்கின் 31 சாட்சிகள், நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியம் அளித்துள்ளனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட வர்களின் மிரட்டலுக்கு பயந்து பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன் றத்தில் தொடர்ந்து நடைபெற்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனை வரும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே, 3 பேர் கொலை வழக்கின் விசாரணையை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி இளங் கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார். பின் னர், ராமநாதபுரம் மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, 31 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்த விசாரணையை ஆக. 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT