Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

சாராயம், குட்கா விற்றதாக 3 பேர் கைது :

ஆம்பூர்: ஆம்பூர் நகர காவல் துறையினர் பேருந்து நிலையம் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, குட்கா, பான்மசாலா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளரான எம்.கே.நகரைச் சேர்ந்த இம்ரான்(33), மக்கான் பகுதியைச் சேர்ந்த அபான்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அதேபோல, ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் கீழ்முருங்கை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது குளிதிகை பகுதியைச் சேர்ந்த சேட்டு (55) என்பவர் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் சேட்டுவை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x