Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த் துறையும், கம்போடியா நாட்டு அங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கம்போடியா அங்கோர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் எம். ரமேஷ்வரன் கலந்துகொண்டார்.
கம்போடியா நாட்டு தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் தமிழ் இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய நிகழ்வுகளில் இக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்கவும், இண்டன்ஷிப் எனப்படும் பயில்நிலை பயிற்சியை கம்போடியா சென்று மாணவர்கள் மேற்கொள்ள வும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்கள் வெளிநாடு சென்று அங்குள்ள கல்வி, கலை, பண்பாட்டை கற்று தங்கள் உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் இந்த ஒப்பந்தம் உதவும்.
இந்நிகழ்ச்சியில் முதுகலை தமிழ்த்துறை தலைவர் க. சிவனேசன் பங்கேற்றார். இந்த ஒப்பந்தத்தின் ஒருங்கிணைப் பாளராக ந. அருள்மொழி செயல்படுவார். கல்லூரித் தொழில் நிறுவன இணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இதில் பங்கேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT