Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM
தூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் ஆளவந்தார் திருநட்சத்திர திருவிழா நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் எம்பெருமானார் சந்நிதியில், வைணவ ஆச்சார்யரான ஆளவந்தார் ஆடி உத்திராடம் திருநட்சத்திர திருவிழா கடந்த 5 நாட்களாக நடந்தது. விழாவில் தினமும் திருவாய்மொழி பாசுரங்கள் பாடப்பட்டு, கோஷ்டி நடந்தது. ஆடி உத்திராடம் நட்சத்திரமான நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு திருமஞ்சனம், 8 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டி சாத்துமுறை நடந்தது. இதனை எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் தலைமை வகித்து நடத்தினார். இதில், முன்னாள் தக்கார் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் சீனிவாச அய்யங்கார் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT