Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த பலரிடம் பண முதலீட்டுக்கு இரட் டிப்பு பணம் தருவதாக கூறி நூதனமுறையில் ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாக கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன கும்பல் மீது சிபிசிஐடி போலீஸார் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை சாமி பிள்ளைதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன், பேராசிரியர். இவரது மனைவி சுதா (38). இவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனம் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து பணம் முதலீடு தொடர்பாக கூறியுள்ளது. இதை நம்பிய சுதா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தநிலையில், முதலில் இரட்டிப்பு தொகையை அந்நிறுவனத்தினர் குறுகிய மாதத்திலேயே வழங்கி யுள்ளனர். இதையடுத்து இந்நிறு வனத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகவே மேலும் பலரை சுதா தரப்பினர் இத்திட்டத்தில் சேர்த்து மொத்தம் ரூ.40 லட்சத்து 40 ஆயிரம் வரை பணத்தை அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை மட்டு மின்றி கேரளாவில் இயங்கிய இந்நிறுவனம் புதுச்சேரியில் இந்திராகாந்தி சதுக்கம் அருகிலுள்ள கட்டிடத்தின் 2-வது மாடியில் இயங்கி வந்தது. அந்த அலுவல கத்தில் தான் சுதா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் திடீரென அந்நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மூடிவிட்டு தலைமறைவானது. அதிர்ச்சியடைந்த சுதா தரப்பில்புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார்அளித்தனர். அதன்பேரில் சிபிசிஐடிபோலீஸார் சம்பந்தப்பட்ட நிறுவ னத்தின் உரிமையாளர் மட்டுமின்றி ஒருங்கிணைப்பாளர்களான கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தைச் சேர்ந்த ரமேஷ் (எ) கவுதம் ரமேஷ் (33), கனகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் களை ஏமாற்றி ரூ.5 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன கும்பலை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT