Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM
மானாமதுரை ரயில்வே காலனி சவேரியார்பட்டணத்தைச் சேர்ந்தவர் சுதந்திர ராஜ்குமார் (33). தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12-ம் அணியில் காவலராகப் பணிபுரிகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சந்தோஷிடம் கொடுத்து வைத்திருந்த தங்க மோதிரத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திர ராஜ்குமார் மானாமதுரை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார்.அப்போது சுதந்திர ராஜ்குமாரை சந்தோஷ் (24), காளீஸ்வரன் (30), மனோஜ் (32) ஆகியோர் தாக்கினர். மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT