Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி கிராமத்தில் கடந்த 13-ம் தேதி விவசாயி கிருஷ்ணன்(80), அவரது மனைவி சுலோச்சனா (75) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் திருட்டில் ஈடுபட வந்த கும்பல் தம்பதியை கொலை செய்தது தெரிந்தது.
இதுதொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கடந்த 16-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பில்பருத்தி பகுதியைச் சேர்ந்த வேலவன் (24), சந்துரு (22), எழிலரசன்(26) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT