Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கண்மாய் நிரம்பும்போதெல்லாம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுவதால் மாற்று இடம் வழங்கி வாழ்வாதாரம் காக்க வேண்டும் என மாத்தூர் செக்கடி கிராமத்தினர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: அழகர்கோவில் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சி செக்கடி கிராமத்தில் 40 குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர் வசித்து வருகிறோம். எங்களது செக்கடி கிராமம் மாத்தூர் கீழக்கண்மாய் அருகே உள்ளது. ஆண்டுதோறும் கண்மாய் நிரம்பும்போது தண்ணீர் எங்களது வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. அப்போது பெரியவர்களும் குழந்தைகளும் சிரமப்படுகிறோம்.
கடந்த 40 ஆண்டாக இதேநிலையில் வாழ்ந்து வருகிறோம். கண்மாய் நிரம்பி வீடுகளை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படும்போது மாத்தூர் ஊராட்சியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைப்பது வழக்கம். இதில் தண்ணீர் சூழ்ந்து பல குடிசை வீடுகள் இடிந்து போயுள்ளன. இதனை சரி செய்வதற்கு எங்களது உழைப்பும், சம்பாத்தியமும் சரியாகி
விடுகிறது. தற்போதும் எங்களது வீடுகளை தண்ணீர் சூழும் நிலை உள்ளது. எனவே 40 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 40 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்கி வாழ்வாதாரம் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT