Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM

அரசு கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த கோரிக்கை :

காரைக்கால்

ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்த பெருந்தலைவர் காமராஜர் அரசு கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

எங்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. யூனிட் டெஸ்ட், மாதிரி தேர்வு என அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன. தற்போது, திடீரென சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து வந்துள்ள அறிவிப்பில், வழக்கமான முறையிலேயே(ஆஃப் லைன்) தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தக் கோரி பல்கலைக்கழகத்துக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பினோம். ஆனால், எவ்வித பதிலும் இல்லை. எனவே, இதுகுறித்து ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் மனு அளித்துள்ளோம். மாணவர்களின் நிலையையும், கரோனா பரவல் சூழலையும் கருத்தில்கொண்டு ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x