Published : 26 Jun 2021 03:14 AM
Last Updated : 26 Jun 2021 03:14 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் கணேசன் (27). இவர், தனது நண்பர்கள் மருதுபாண்டி (27), சின்னஜமீன் (30) ஆகியோருடன் சேர்ந்து, ஏ.கே.எஸ். தியேட்டர் ரோட்டில் வந்த ஒரு நபரை வழிமறித்து, ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி கணேசனை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, மிரட்டல் உட்பட 19 வழக்குகள் உள்ளன. கணேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து கணேசன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT