Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
பென்னாகரம் வட்டம் ஏ.பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த மக்கள் நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு குழுவாக வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் பட்டா கிடைக்கவில்லை.
இதனால் அடிக்கடி சிலரது மிரட்டலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT