Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM

அரக்கோணம் அருகே - தனியார் நிறுவன ஊழியர் கொலை :

அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் வெட்டு காயங்களுடன் கொலையான தனியார் நிறுவன ஊழியர் உடலை காவல் துறையினர் நேற்று கைப்பற்றினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கவுதம் (28). இவர்,  பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே, பள்ளூர் மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பம்ப்செட் அருகே இளைஞர் ஒருவர் உடலில் வெட்டு காயங் களுடன் உயிரிழந்து கிடப்பதாக நெமிலி காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன், காவல் ஆய்வா ளர்கள் லட்சுமிபதி (நெமிலி), கோகுல்ராஜ் (கிராமியம்), அரக் கோணம் வட்டாட்சியர் பழனிராஜன் உள்ளிட்டவர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், உயிரிழந்த நபர் பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கவுதம் என்பது தெரியவந்தது. கவுதம் உடல் கிடந்த இடத்தின் சற்று தொலைவில் மதுபாட்டில்கள் சிதறிக்கிடந்தன. எனவே, மது அருந்த வந்த இடத்தில் தகராறு ஏற்பட்டு கவுதம் கொலை செய்யப் பட்டாரா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.இதைத்தொடர்ந்து, கவுதம் உடலை கைப்பற்றிய நெமிலி காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இந்த கொலை குறித்து விசாரணை நடத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக் கருப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x