Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலங்காயம் வட்டாரக் கிளையின் சார்பாக ரூபாய் 70 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி, ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலங்காயம் கிளை சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கூட்டணியின் ஆலங்காயம் கிளைத் தலைவர் பூங்காவனம் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜோலார்பேட்டை திமுக சட்டப் பேரவை உறுப்பினர் தேவராஜியிடம் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் ஒப்படைக்கப்பட்டன.
அப்போது, ஆலங் காயம் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பசுபதி, வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், வாணியம்பாடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையமருத்துவ அலுவலர் மருத்துவர் தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் தேவராஜ் பேசும்போது, ‘‘தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளார்.
தேர்தலில் பக்கத்து தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றாலும் அது எந்தத் தொகுதியாக இருந்தாலும் விட்டுவிட மாட்டேன். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT