Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட - 14 கிலோ கஞ்சா பறிமுதல் :

கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா பகுதியில் நேற்று முன்தினம் பாதிரிவேடு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில், ஆந்திர மாநிலம் - தடா பகுதியிலிருந்து, சென்னையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அச்சோதனையில், மோட்டார் சைக்கிளில் 14 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீஸார், அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த, செங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (26), கார்த்திக் (24) ஆகியோரைக் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x