Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே ஓவர்குடி கிராமத்தில் நேற்று நேரிட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஓவர்குடி கிராமம் தெற்கு தெரு அருகே வயல்வெளியில் பட்டுப்போன நிலையில் இருந்த மூங்கில் மரங்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதிலிருந்து கிளம்பிய தீப்பொறி விழுந்து, அருகிலிருந்த கூரை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. இதில், விவசாய கூலித் தொழிலாளர்களான கல்யாணசுந்தரம், மணியம்மாள், தமிழ்ச் செல்வன், வெங்கடாசலம், குப்புசாமி, சுந்தரி, மணிகண்டன் ஆகியோரின் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தொடர்ந்து, எம்எல்ஏ க.மாரிமுத்து அங்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி, விரைவில் தொகுப்பு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT