Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

திருப்புவனம் வைகை ஆற்றில் - குளித்த சிறுவன் நீரில் மூழ்கி மரணம் : திருப்புவனம் :

: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கிருபாகரன். இவரது மகன் சோலைநிதிஷ் (14) நேற்று காலை நண்பர்களுடன் வைகை ஆற்றில் ஓடிய மழை நீரில் இடிந்த பாலம் அருகே குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் கீழே சிக்கிக் கொண்டார். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சிறுவனைத் தேடினர். நான்கு மணி நேரத்துக்குப் பின் சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x