Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கல் :

தஞ்சாவூர்: கரோனா 2-வது அலை பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் ரயிலடி, பழைய பேருந்து நிலையம், மேம்பாலம், மானோஜிபட்டி, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ, கார், வேன் ஓட்டுநர்கள், சிவாஜி நகர் கூலித் தொழிலாளர்கள் என 203 குடும்பங்களுக்கு நேற்று முன்தினம் மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.

ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி தொடங்கிவைத்தார். தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் மத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், மத் ஜிதமானசாநந்த மகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கிருஷ்ணா பவன் பாண்டுரங்கன், ஆனந்தன், சேவாபாரதி மண்டல பொறுப்பாளர் கேசவன், சுரேந்திரபாபு, ஜெயக்குமார், கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x