Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM

கரோனாவால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு :

திருவண்ணாமலை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்யாறு பகுதி 108 ஆம்புலனஸ் ஓட்டுநர் நேற்று உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில் வசித்தவர் செல்வம்(49). இவர், செய்யாறு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கரோனா தொற்றுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்துள்ளது, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x