Published : 28 May 2021 06:43 AM
Last Updated : 28 May 2021 06:43 AM

புதிதாக 1,680 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 438 பேருக்கு கரோனா தொற்று நோற்று உறுதியானது. மாவட்டத்தில் கடந்த வாரம் வரை தினசரி சராசரி பாதிப்பு 700-ஆக இருந்தது. நேற்று முன்தினம் 433 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் நேற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. 3 வாரங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் குறைந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. 4,381 பேர் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். மருத்துவ சிகிச்சையில் குணமடைந்த 459 பேர் நேற்று வீடு திரும்பினர். 2 பேர் உயிரி ழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 324-ஆக உயர்ந்துள் ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 39,026-ஆக உயர்ந்துள்ளது. 30,979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x